ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்!

0
ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு - மாநில அரசு திட்டம்!
ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு - மாநில அரசு திட்டம்!
ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஜூலை 1 முதல் தெலுங்கானாவில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில அரசு முழு ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற்று உள்ளது. குறைந்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 50 சதவீத வருகையுடன் தெலுங்கானா அரசு ஜூலை 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க உள்ள நிலையில், ஆந்திர அரசு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஓலா தொழிற்சாலை விரைவில் திறப்பு!

காலை மற்றும் மாலை என இரு தொகுதிகளில் வகுப்புகள் நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 சதவீத மாணவர்கள் உள்ளனர். மாற்று நாட்களில் வகுப்புகள் நடத்த முடியுமா என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆந்திர கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அவர்கள் கூறுகையில், “ஆகஸ்டில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளார். இருப்பினும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமல் – வங்கதேச அரசு!

ஆனால் பெற்றோர் சங்கங்கள் பள்ளிகள் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் வரை மீண்டும் திறக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்புகளுடன் பள்ளிகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். “பள்ளியில் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது ஒரு சவாலாக இருக்கும்” என்று கூறியுள்ளனர். இதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!