நாடு முழுவதும் ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமல் – வங்கதேச அரசு!

0
நாடு முழுவதும் ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமல் - வங்கதேச அரசு!
நாடு முழுவதும் ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமல் - வங்கதேச அரசு!
நாடு முழுவதும் ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமல் – வங்கதேச அரசு!

நாடு முழுவதும் புதிய வகை கொரோனா தொற்றான டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வங்கதேசத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளது. மிகவும் வேகமாக இந்த வகை வைரஸ் பரவுவதால் அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

புதிய வகை வைரஸ்

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீனாவில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இன்று வரை மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த வைரஸின் புதிய வகையான டெல்டா வைரஸ் தற்போது உலகில் உள்ள 85 நாடுகளுக்கு பரவி விட்டதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

புதிய 500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய தகவல் அலுவலகம் விளக்கம்!

இப்படியாக இருக்க, தற்போது நமது அண்டை நாடான வங்கதேச நாட்டில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் தற்போது அங்கு ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவம் சார்ந்த போக்குவரத்து தவிர்த்து எந்த விதமான போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது. அவசர தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். கூடிய விரைவில் இந்த நோய் பரவல் இந்தியாவிலும் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!