தமிழகத்தில் புதிதாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஓலா தொழிற்சாலை விரைவில் திறப்பு!
இந்த ஆண்டு மிக விரைவில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஓலா நிறுவனத்தின் தொழிற்சாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
தமிழகத்தில் ஓலா நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் இருந்து வருகின்றது. இதனை அடுத்து கூடிய விரைவில் இந்தியாவில் ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை மிகவும் அதிகமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே போல் வாகன சந்தையில் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெரும் புரட்சியினை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் TET தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க என்று ஓலா நிறுவனம் 2400 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது. தமிழகத்தின் ஓசூரில் இதற்கான ஆலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட இருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த சார்ஜிங் பாயிண்டுகள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மால்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் உணவகங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக பல சிறப்பம்சங்கள் இருப்பதால் இந்த வாகனத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Good
Hiii
Which type of job
Echa pasangla
Sorry super