விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரியங்கா? ஓபன் டாக்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் முதல் வாரம் தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளிப்படையான விளக்கத்தை பிரியங்கா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5:
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் ரித்திகா வெற்றி பெற்றார். மூன்றாவது சீசனில் முகின் வெற்றி பெற்றார். நான்காவது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். முந்தைய சீசன்களை விட கடந்த சீசனில் அதிகப்படியான வாக்குகள் வந்தது என அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்தார்.
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ பிரபலத்திற்கு விரைவில் திருமணம் – வெளியான புகைப்படங்கள்!
இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனிலும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார் என, வெளியான இரண்டு ப்ரோமோக்கள் மூலமாக தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் வழக்கம் போல இந்த ஆண்டும் பிக்பாஸில் இவர் இருக்கிறார் என வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் உறுதியானவர்கள் பட்டியலில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் விஜே தீபிகா விலகியதற்கான காரணம் – அவரே சொன்ன விளக்கம்!!
இது குறித்து பிரியங்காவிடம் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு போறிங்களா என கேள்வி மழைகளை கொட்டி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் விஜய் டிவி பிரியங்கா வெளிப்படையான பதில் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அவர், தனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் போக வேண்டும் என்ற விருப்பம் தான். ஆனால் இந்த சீசனில் வேண்டாம், அடுத்த சீசனில் முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பதில் காரணமாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகிறாரா, இல்லையா என குழப்பம் எழுந்துள்ளது.