“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் விஜே தீபிகா விலகியதற்கான காரணம் – அவரே சொன்ன விளக்கம்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா திடீரென மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த சீரியலில் இருந்து அவர் விலகியதற்கான காரணத்தை தனியார் யூடுப் சேனலில் பேட்டி ஒன்றை அளித்து விளக்கியுள்ளார்.
விஜே தீபிகா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல கூட்டு குடும்பத்தில் வாழும் அண்ணன், தம்பிகளின் பாசத்தை பற்றி சொல்லும் கதைக்களத்துடன் இயங்கி வருகிறது. 4 அண்ணன், தம்பிகள் பாசத்துடன் இருக்கின்றனர். அனைத்து அண்ணன்களும் கடைக்குட்டி கண்ணன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர். அவர் மட்டுமில்லாமல் அண்ணிகளும் பாசத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர் காதலுக்காக வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார்.
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ : தொடக்கத்திலேயே சண்டையிடும் பார்வதி & ஸ்ருஷ்டி – வெளியான ப்ரோமோ!
இரண்டாவது அண்ணியின் அப்பா மூலமாக அவர்களுக்கு தங்க இடமும், வேலையும் கிடைக்கிறது. இவ்வாறு கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. கண்ணன் ஐஸ்வர்யாவை சுற்றியே கடந்த மாதம் முதல் கதை இருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரமான ரோஜா புகழ் சாய் காயத்ரி நடிக்கிறார். இன்று முதல் அவர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
இது குறித்து காரணம் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் குழப்பத்தில் விஜே தீபிகாவின் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தனியார் யூடுப் சேனலில் அவர் பேட்டி ஒன்று அளித்து விளக்கி உள்ளார். அதாவது அவர் இந்த சீரியலில் சேர்ந்த பின்னர் அவருக்கு முகத்தில் பருக்கள் பிரச்சனை தொடங்கியதாகவும், அதை சரி செய்து விடுவேன் என 3 மாதம் சீரியல் நிர்வாகத்திடம் நேரம் வாங்கியதாக அவர் தெரிவிக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய நடிகை அறிமுகம் – இனி இவருக்கு பதில் இவர்!
ஆனால் 3 மாதங்களில் பரு பிரச்சனை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் சீரியலில் இருந்து தன்னை நடிக்க அழைக்கவில்லை எனவும் வேறு ஒருவர் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். சீரியல் நிர்வாகம் எனக்கு டைம் கொடுத்தார்கள். ஆனால் என்னால் சரி செய்ய முடியவில்லை என தெளிவாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு காரணமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.