‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யா மனசாவிற்கு சுகப்பிரசவம் – டெலிவரி பிளான்! அவரே அளித்த பதில்!
தற்போது 2வது முறை கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ஆலியா மானஸா தனது சீரியல் விலகல் மற்றும் பிரசவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஆலியா
விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ என்கிற சூப்பர் ஹிட் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆலியா மானஸா. இந்த தொடரில் செம்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஆலியா மானஸாவுக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் நல்ல வரவேற்புகளை கொடுத்து வந்தனர். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக கார்த்திக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து வந்த இவர், கடந்த ஆண்டில் திருமணமும் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ஐலா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்ததும் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டுமாக சீரியலில் தலைகாட்ட துவங்கியுள்ள நடிகை ஆலியா மானஸா தற்போது விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஆலியா மானஸா மீண்டுமாக கர்ப்பமாகி இருக்கிறார்.
இந்த தகவலை நடிகர் சஞ்சீவ் ஒரு இன்ஸ்டா லைவ் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், இதனை ஆலியா மானஸாவும் தற்போது உறுதிபடுத்திருக்கிறார். இப்போது 2வது குழந்தையை எதிர்பார்த்து இருக்கும் நடிகை ஆலியா ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஆலியா ஒரு முக்கிய பதிவை வெளியிட்டிருக்கிறார்.
விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியல் நடிகையின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் வாழ்த்து!
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆலியா, ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் தகவல் உண்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதே போல முதல் பிரசவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘முதல் குழந்தையை சிசேரியன் மூலமாக தான் பெற்றுக்கொண்டேன். ஆனால் 2வது குழந்தைக்கு சுக பிரசவத்தை எதிர்பார்க்கிறேன்’ என வெளிப்படைத் தன்மையுடன் பதில் அளித்துள்ளார் நடிகை ஆலியா.