SSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தமிழில் தேர்வெழுத அனுமதி!!
இந்தியாவில் மத்திய அரசு நடத்தும் SSC Multi Tasking தேர்வின் கீழ் 11,409 காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
SSC தேர்வு:
இந்தியாவில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) கடந்த 18ம் தேதி Multi Tasking Staff பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் இப்பணியின் கீழ் சுமார் 11,409 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் 27 வயதிற்குட்பட்டவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு CBT முறையில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இந்திய நீதிமன்றங்களில் 5ஜி இணைய சேவை – மத்திய அமைச்சர் தகவல்!
இந்த SSC Multi Tasking தேர்வானது இதுவரை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு தமிழ் மொழியிலும் SSC தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்ல கன்னடம், இந்தி, தெலுங்கு உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.