பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் இன்று காலமானார் – திரைத்துறையினர் இரங்கல்!
ஹிந்தி திரை உலகின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் அவர்களின் தாயார் அருணா பாட்டியா மும்பையில் இன்று காலமானார். இதனையடுத்து திரை உலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகரின் தாயார்:
ஹிந்தி திரை உலகின் பிரபலம், முன்னணி நடிகர்களும் ஒருவர் அக்ஷய் குமார் 90க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்து தனது திறமையால் உயர்ந்தவர். கரீனா, கத்ரீனா, தீபிகா, போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்துள்ளார். தமிழில் வெளியான சிறுத்தை, காஞ்சனா, 2.0 போன்ற திரைப்படங்களை ஹிந்தியில் நடித்து தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்றார். அக்ஷய் குமார் தாம் நடித்த திரைப்படங்களுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
‘குக் வித் கோமாளி’ புகழ் ஓபன் டாக் – ரூ.25 லட்சம் எல்லாம் வாங்கவில்லை!
இந்திய திரைத்துறைக்கு அளித்த பங்களிப்பிற்காக 2009ம் ஆண்டு அக்ஷய் குமார் அவர்களுக்கு மத்திய அரசு சார்பாக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அக்ஷய் குமார் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் நடித்த பெல்பாட்டம் படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சின்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது.
விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் – வெளியான புகைப்படம்!!
இந்த நிலையில் அவரது தாயாரின் உடல் நிலை மிக மோசமாக இருந்த காரணத்தால் திடீரென மும்பை திரும்பினார். ஏற்கனவே சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா மும்பையில் இன்று காலமானார். இதையடுத்து திரை பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அக்ஷய் குமார் தனது தாய்க்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.