Airtel நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் மீண்டும் அறிமுகம் – பயனர்கள் மகிழ்ச்சி!
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 49 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 100 எம்பி டேட்டா கிடைக்கிறது.
ஏர்டெல் ரீசார்ஜ் பிளான்
ஏர்டெல் நிறுவனம் மற்ற நெட் ஒர்க் நிறுவனங்களுக்கு போட்டியாக பல ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஏர்டெல் தனது மலிவு விலை ரீசார்ஜ் திட்டமான ரூபாய் 49 திட்டத்தை நீக்கியது. அதற்கு பதிலாக ரூபாய் 78 ரீசார்ஜ் திட்டம் நடைமுறையில் இருந்து. சமீபத்தில் ரூபாய் 2,798, 699, 499 ஆகிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி பயனர்களுக்கு இலவச Disney plus Hotstar சந்தாவை வழங்கியது. இந்த பிளானில் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
திருப்பூரில் நாளை (செப்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதே போல ஏர்டெல் 448 ரூபாய் ரீசார்ஜ் திட்டமும் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இவை ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியங்களை அளிக்கிறது. தற்போது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ரத்து செய்யப்பட்ட ஏர்டெல்லின் ரூபாய் 49 ரீசார்ஜ் திட்டம் மீண்டும் கொண்டவரப்பட்டுள்ளது. அனைத்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் போலவே, ஏர்டெல்லின் ரூ .49 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு – அக்.8 கடைசி நாள்!
100 எம்பி டேட்டா, வரம்பு முடிந்தவுடன், தரவு கட்டணம் நிமிடத்திற்கு 50 பைசா, காலிங்கிற்கு ரூபாய் 38.52 டாக் டைம் போன்ற அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளது. மேலும் 49 திட்டத்தில் காலிங் ரீச்சார்ஜ் வினாடிக்கு 2.5 பைசாவாக வசூலிக்கப்படும். இந்த 49 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். ஏர்டெல்லின் விலை குறைந்த ரீசார்ஜ் திட்டமாக 49 திட்டம் உள்ளது. மீண்டும் இந்த திட்டம் அறிமுகபடுத்தப்பட்டாலும் இதில் புதிய மாற்றங்கள் ஏதும் இல்லை. பழைய நடைமுறையே உள்ளது.
Airtel 49ரூபாய் திட்டத்தில் SMS வசதி இல்லை. 199 ரூபாய் திட்டத்திலிருந்து SMS வசதி உள்ளது.இதனால் லட்சக்கணக்கான சிம்கார்டுகள் ரீச்சார்ஜ் செய்யாமல் ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டது.