தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு – அக்.8 கடைசி நாள்!
தமிழகத்தில் கால்நடை படிப்புகளில் சேர நேற்று வரை 18,758 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கால்நடை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
கால்நடை படிப்புகள்:
தமிழகத்தில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர்கள் மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவியதன் காரணமாக நேரடி மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்து தற்போது கலை கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
அக்.11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இன்று முதல் பொறியியல் கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. மற்ற படிப்புகளை தொடர்ந்து கால்நடை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. கால்நடை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. மேலும் இணையதளம் வாயிலாக சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றம் இதர விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – CERT எச்சரிக்கை!
இந்த நிலையில் கால்நடை படிப்புகளில் சேர நேற்று வரை 18,758 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கால்நடை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அக்.8 வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். NRI மாணவர்கள் வரும் நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.