ஏப்ரல் 11 முதல் 25 வரை விமானநிலையம் மூடல் – சுற்றுலாத்துறையின் கோரிக்கை!
இந்திய விமானப்படை மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமான நிலைய ஓடுபாதையை சரிசெய்யும் பணிக்காக ஏப்ரலில் 15 நாட்களுக்கு விமான சேவைகள் நிறுத்தப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்திடம் அறிவித்திருந்த நிலையில், இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று சுற்றுலாத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
விமானநிலையம் மூடல்:
மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமான நிலையத்தில் நவீன முனையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய விமானப்படை ஓடுபாதையின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் விமான நிலையம் மற்றொரு பெரிய உள்கட்டமைப்பு செய்கிறது. ஓடுபாதை மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் இந்திய விமானப்படை (IAF), இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தற்போது ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஹாப்பி நியூஸ்! விரைவில் அறிவிப்பு!
அதில், ஓடுபாதையின் நெகிழ்வான பகுதியின் இறுதிப் பகுதியை மீண்டும் மேற்கொள்வதற்காக நிலையான பிரிவு நடவடிக்கைகளுக்காக ஓடுபாதை ஏப்ரல் 11 முதல் 25 வரை முழுமையாக மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஓடுபாதை ஏப்ரல் 26 வரை காலை 8 மணி முத்தாக மாலை 5 மணி வரை செயல்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஓடுபாதை மற்றும் விமான சேவைகள் மூடப்படுவதாக AAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய கட்டணங்கள்!
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஓடுபாதை மறுசீரமைப்பு வேலைகளில் IAF இரவில் வேலை செய்தது. ஆனால் இறுதிக்கட்டப் பணியை பகலில் செய்ய வேண்டும். இதனால், ஓடுபாதையை 15 நாட்களுக்கு பயன்படுத்த முடியாது. இங்கிருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் இயக்கப்படுகின்றது. பயணிகள் மட்டுமில்லாமல், இங்கு ஏராளமான வணிகர்கள் மற்றும் நோயாளிகள் விமான நிலையத்திற்கு பயணிக்கின்றனர். வடக்கு வங்காளத்தின் சுற்றுலாவும் பாக்டோக்ரா விமான நிலையத்தை நம்பியே உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த பணிகளை நடத்தாமல் அதற்கு முன்னதாக பணிகளை முடிக்குமாறு சுற்றுலா துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.