இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் எப்போது? எய்ம்ஸ் தலைவர் தகவல்!

0
இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் எப்போது? எய்ம்ஸ் தலைவர் தகவல்!
இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் எப்போது? எய்ம்ஸ் தலைவர் தகவல்!
இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் எப்போது? எய்ம்ஸ் தலைவர் தகவல்!

நாடு முழுவதும் மக்கள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை சரியான முறையில் கடைபிடிக்காத காரணத்தினால் மூன்றாம் அலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் விளைவாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் பெரும்பான்மையான மாநிலங்களில் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் கல்வி டிவியில் ஒளிப்பரப்பு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறுகையில், கொரோனா முதல் இரண்டாம் அலை தாக்கத்தின் மூலமாக மக்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. மக்கள் யாரும் சரியாக முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதுவே கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பாட காரணமாக அமைந்துள்ளது. 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நாடு முழுவதும் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள சிரமம் ஏற்படும். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!