தொலைதூர மேலாண்மை படிப்புகளுக்கு நெறிமுறை – ஏஐசிடிஇ அறிவிப்பு!!
ஏஐசிடிஇ:
இந்தியாவில் பொறியியல், தொழில்நுட்பம், மருந்தியல், கட்டுமானக் கலை, நகரமைப்பு, விடுதி மேலாண்மை, உணவுத் தொழில்நுட்பம், பயன்பாட்டுக் கலை, தொழில், மேலாண்மைக்கு கல்வி மற்றும் கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்க தன்னாட்சியாக செயல்படும் அமைப்பாகும்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் மூலம் மதிப்பீடு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!!
மேலாண்மை, கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொறியியலில் உள்ள தகவல் அறிவியல், தொழில்நுட்ப களம், தளவாடங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய பிரிவுகளின் படிப்புகளை தொலைதூரம், திறந்தவெளி, இணைய வழியில் வழங்கவும் ஒப்புதல் அளித்து உள்ளது.
கல்வி நிறுவனத்தின் தகுதி:
மேற்கண்ட படிப்புகளை தொலைதூரம், திறந்தவெளி மற்றும் இணைய வழியில் வழங்க கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. அதாவது, நாக் அங்கீகாரம் 3.26 (4), என்பிஏ-வில் 1,000-க்கு 700 மதிப்பெண்கள், தேசிய தரவரிசை பட்டியலில் (என்ஐஆர்எஃப்) முதல் 100 இடம் ஆகிய 3-ல் ஏதேனும் 2 தகுதிகளை கல்வி நிறுவனங்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம்:
ஏஐசிடிஇ அமைப்பு அறிவித்துள்ள தகுதிகளை பெற்றுள்ள, விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அமைப்புக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், படிப்புகளின் கால அளவுகளுக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு 3 முறை மாணவர் சேர்க்கை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிக தகவல்களை பெற விரும்பினால் https://www.aicte-india.org/ என்ற அதிகார்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்