6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வருகைப்பதிவு குறைவு!!
பள்ளிகள் திறப்பு:
குஜராத் மாநிலத்தின் தலைநகரான அஹமதாபாத்தில் கொரோனா நோய்த்தொற்றிற்கு பின்னர் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முன்னதாக ஜனவரி 11ம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் பிப்ரவரி 8ம் தேதி முதல் திறக்கப்பட்டது. கடந்த வாரம் பிப்ரவரி 17ம் தேதி 6 முதல் 8ம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.
தமிழக அரசு செவிலியர் பயிற்சி பள்ளி – மாணவியர் சேர்க்கை அறிவிப்பு!!
இந்நிலையில் நேற்று 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிகளின் முதல்வர்கள் பலர் மாணவர் வருகை குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று புதிய வளர்ச்சியை அடைந்துள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள் என்றும், ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளிலேயே மாணவர்களுக்கான பாடங்கள் அதிகபட்சமாக நடத்தப்பட்டு விட்டதாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றும் கூறினர்.
வருகை சதவீதம்:
முன்னதாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை 40% ஆக இருந்த நிலையில் தற்போது 72% மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இதனை தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வருகை ஒரு சில இடங்களில் 10%, மற்ற இடங்களில் 20% முதல் 25% ஆக உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்