TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நேரடி நியமன பணிகளுக்கு வயது வரம்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், அரசுப் பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும் பணிகளுக்கு வயது வரம்பு சுமார் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணை இன்று (செப்டம்பர் 27) முதல் அமலுக்கு வந்துள்ளது.
வயது வரம்பு நீட்டிப்பு
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது தவிர சில அரசுப் பணியிடங்கள் TNPSC சார்பில் நேரடியாக நிரப்பப்படுவது உண்டு. அந்த வகையில் தமிழக அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என கடந்த சட்டப்பேரவையின் போது மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
இதனையடுத்து இந்த நடைமுறையை செயல்படுத்துவது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் TNPSC, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம், ஆகியவற்றால் நடத்தப்படும் நேரடி நியமன பணிகளுக்கு வயது வரம்பு 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வயது வரம்பு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை முதன் முதலாக TNPSC செயல்படுத்த இருக்கிறது.
அதன் கீழ், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்கத்தில் கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர், தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று (செப்டம்பர் 26) முதல் துவங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 8ம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்வுக்கு மாஸ்டர் ஆப் டவுன் பிளானிங் பட்டதாரிகள், BE மற்றும் B.Arch, சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.