சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா – காரணம் இது தான்.. சுகாதார அதிகாரிகள் தகவல்!
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாறுபாடு அடைந்த ஓமிக்ரான் வைரஸ் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா என்னும் வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. அதன் விளைவாக படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்தது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் அனைத்து நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த நேரத்தில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டுள்ளது.
நேர மாற்றம்.. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு – பனிமூட்டம் எதிரொலி!!
Exams Daily Mobile App Download
மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரிக்கும் பாதிப்புக்கு காரணம் ஓமிக்ரானின் BA.5.2 மற்றும் BF.7 என்ற துணை வகைகள் தான் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த BF.7 வைரஸ் பெய்ஜிங் நகரத்தில் வேகமெடுத்து பரவி வருகிறது. இதுவரை அந்நகரில் 70% மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 90 நாட்களில் 87 கோடி பேர் கொரோனோவால் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் பல லட்சம் பேர் உயிர் இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.