மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் விளக்கம்! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தற்போது ஓமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 415-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும்..! அரசு முக்கிய உத்தரவு!
இதையடுத்து மஹாராஷ்டிர மாநிலத்தில், 108 பேருக்கும், டெல்லியில், 79 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 43 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில், 38 பேருக்கும், கேரள மாநிலத்தில், 37 பேருக்கும், தமிழகத்தில், 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.
Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன? தவறாமல் படிங்க!
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பி செய்தியாளரிடம் கூறியதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் தேவையானது 800 மெட்ரிக் டன்கள் வேண்டும் எனும் நிலை ஏற்படும் போது மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறினார். இதையடுத்து மாநிலத்தில் ஒமைக்ரான் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.