தேர்தலுக்குப் பின் வரும் அதிரடி மாற்றம்.. பொதுமக்களுக்கு ஷாக் – வெளியான தகவல்!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பின் அதிரடி மாற்றம் ஒன்று வரவிருக்கிறது.
அதிரடி மாற்றம்
நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். எனவே யார் வெற்றி பெறுவார் என தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளது. ஆட்சி மாற்றம் வருமா வராதா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விழாக்கோலம் பூண்ட மதுரை …. கோலாகலமாக இன்று சித்திரை திருவிழா தொடக்கம்…!
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20% வர உயர்த்தப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.