வீட்டை பார்க்க வரும் விவகாரமான ஆட்கள்; பதற்றத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாக் ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அடுத்தடுத்து புது புது திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், வீட்டை விற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், இதனை அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அதில் ஒரு புது சிக்கல் வருகிறது.
ஷாக் ட்விஸ்ட்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதில் இருந்து புதுகோணத்தில் கதை நகர்ந்து வருகிறது. கதிர் எப்படி கடனை அடைப்பார் அதற்காக அவர் தொழிலில் எவ்வாறு முன்னேறுவார் என்பது தான் முக்கிய காட்சிகளாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் நஷ்டத்தை சந்தித்து வந்த ஹோட்டல் தொழிலில் புது புது யுக்திகளை கதிரும் முல்லையும் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் கதிரின் கடை, புகழை அடைய தொடங்கியுள்ளது.
WhatsApp அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்கப் போவதை தெரிந்து கொண்டு பார்வதியும், மல்லியும் தனத்திடம் வந்து சண்டை போடுகின்றனர். இந்த வீட்டில் எங்களுக்கும் பங்கு இருக்கு, விற்பதற்கு பேசி முடித்ததும், கண்டிப்பா எங்க கிட்ட சொல்லணும், நாங்க வந்து எங்க பங்கை வாங்கிக் கொள்வோம் என்று சண்டை போட்டு விட்டு வந்ததாக கதிர், முல்லை மற்றும் முருகனிடம் வந்து சொல்லுகின்றனர். இதனால், அவர்கள் மூவரும் பார்வதி மற்றும் மல்லியை திட்டுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விலைக்கு வாங்க வருபவர் வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார். இதனால், மீனாவும் தனமும் வீட்டை சுற்றி காட்டுகின்றனர். அந்த நபர் வீட்டில் இருக்கும் போட்டோ மற்றும் பொருட்கள் அனைத்தையும் பற்றி கேட்கிறார். இதனால், மீனா கடுப்பாகிறார். பின்னர், ரூமிற்க்கு வந்து பார்க்கும் போது இது யார் ரூம், பீரோவில் என்ன இருக்கிறது, அதை காட்ட மாட்டீர்களா? என்று கேட்கிறார். இதனால் புது சிக்கலில் வந்து மாட்டிக் கொண்டதாக குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்