இலவச விடுதி வசதியுடன் M.Phil., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை – உலக தமிழாராய்ச்சி நிறுவனம்!
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசமாக கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிப்பதற்கு மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், அதன் தொன்மையை பாதுகாக்கும் வழியிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழ் மொழியை கற்பிக்க பல பல்கலைகளும் பல பாட திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் குறித்து அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் 33 நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆக பதவி உயர்வு – அரசு திட்டம்!!
அதில், 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. இதற்கு தகுதியாக மாணவர்கள் தங்களின் முதுகலை படிப்பில் 50% மற்றும் நுழைவு தேர்வில் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.இவை இரண்டையும், சேர்த்து பட்டியல் தயாரிக்கப்படும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசின் இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
இந்த படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தகுந்த உண்மை சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்கள் எடுத்து வரவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கீழே உள்ள முகவரிக்கு வந்து சேரவேண்டும். நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும். கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி, சென்னை – 113, பேசி : 044-2254 2992.