தமிழகத்தில் 33 நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆக பதவி உயர்வு – அரசு திட்டம்!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 33 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல மக்களுக்கான பல நலத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல அரசு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TN 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பேரூராட்சிகள் மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நகராட்சிகளாக மாற்றம் செய்யப்படும் அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 33 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், திருவள்ளூரில் பொன்னேரி, கடலூர் மாவட்டத்தில் வடலூர், தஞ்சையில் அதிராம்பட்டினம், தேனியில் உத்தமபாளையம், தூத்துக்குடியில் திருச்செந்தூர், ராணிபேட்டை மாவட்டத்தில் சோழிங்கர், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை, கரூரில் பள்ளப்பட்டி, திருப்பூரில் அவினாசி, கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை , நீலகிரியில் கோத்தகிரி, நெல்லையில் களக்காடு, பணங்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளங்கோடு உள்ளிட்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.