தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதால் இது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
தொழிற்படிப்புகள் ஆய்வு:
தமிழகத்தில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன் வளம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின் படி பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலை, அதனால் அவர்கள் சந்திக்க கூடிய இடர்பாடுகள் உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உருவானது.
திருப்பதி தேவஸ்தான ஆகஸ்ட் மாத சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு – பக்தர்கள் கவனத்திற்கு!
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சேர்க்கை தொழிற்படிப்புகளில் குறைந்த அளவில் இருப்பின், அதை சரிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம், தனது பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இக்குழு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு அறிக்கையை தயார் செய்தது.
TN Job “FB Group” Join Now
இன்று தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்த அறிக்கையை குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலினிடம் சமர்பித்தார். தொழிற் படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிப்பதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என குழு ஆய்வு நடத்தியுள்ளது. எனவே நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகள் தொழிற்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.