ஆகஸ்ட் 31ம் தேதி வரை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் தமிழகத்தில் 2ம் அலையின் தாக்கம் மெல்ல குறையத் தொடங்கியது. பாதிப்புகள் குறைவதை பொறுத்து மாவட்ட நிர்வாகம் தளர்வுகளை அறிவித்து வந்தது.
தமிழக கோவில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்’ – அமைச்சர் துவக்கி வைப்பு!
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 31ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் பாத யாத்திரையாக வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மாவட்டத்தின் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஆடிப் பூரத்தை முன்னிட்டும், கோயில்களில் பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.