தமிழக கோவில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்’ – அமைச்சர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் கோயிகளில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழில் அர்ச்சனை :
தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து இந்து அறநிலைய துறையின் தொடர்ந்து பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 36,000 கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் 3,43,647 முழுவதும் ஒத்துப்போகும் நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? முதல்வரின் திட்டம் என்ன!
அதனை தொடர்ந்து தமிழக கோயில்களில் அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இந்து சமய நிலையத் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன் பிறகு தமிழில் அர்ச்சனை என்பதை திட்டமாக செயல்படுத்தி அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற பலகையை முதல்வர் வெளியிட்டார்.
TN Job “FB Group” Join Now
அதில் குருக்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் போன்றவை இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை தமிழில் அர்ச்சனை தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு கடந்த 3 ம் தேதி அறிவித்தார். அதன்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.