மதுரையில் கூடுதல் கட்டுப்பாடுகள், தடை விதிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் சூழலில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக பாதிப்புக்கு ஏற்ற வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இன்று முதல் மதுரையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சில வாரங்களுக்கு முன்னதாக படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் தமிழக அரசு பகுதி வாரியாக தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகிறது. இந்நிலையில், சில தினங்களாக கொரோனா பாதிப்பு 2,000 ஐ நெருங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு எழுச்சி அடையும் நிலை உள்ளது. எனவே,தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
முன்னதாக அதிக கொரோன பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர், நாகை, சேலம் போன்ற மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தற்போது மதுரை மாவட்டத்திலும் கூடுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து திருக்கோயில்களில் ஆகஸ்ட் 11ஆம் தேதி பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா நோய் தொற்று பரவல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.