நடிகை யாஷிகா & நிரூப் திருமணம் எப்போது? அவரே சொன்ன விளக்கம்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் யாஷிகா விபத்திற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் நிரூப் உடன் திருமணம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
நடிகை யாஷிகா:
தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை யாஷிகா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவாராக இருந்தார். டாஸ்க் என்று வந்தால் தன்னுடைய முழு முயற்சியையும் போட்டு விளையாடுவார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு கார் விபத்து ஏற்பட்டது. அதில் தன்னுடைய நெருங்கிய தோழியை அவர் இழந்தார். மேலும் மரண படுக்கை வரை சென்ற அவர் அதில் இருந்து தன்னுடைய தன்னம்பிக்கையால் மீண்டு வந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவரது நண்பர் நிரூப் கலந்து கொண்டார். அவருக்கு உற்சாகப்படுத்த யாஷிகா வந்தார். அவரை பார்த்து நிரூப் பாப்பா என ஆசையாக அழைத்தார். அதன் பின் நிரூப் வெளியே வந்த பின் யாஷிகாவும் நிரூப் காதலில் இருந்தது பற்றியும் இருவரும் சில காரணங்களால் பிரிந்துள்ளனர் எனவும், தற்போது இருவரும் நட்பாக பழகி வருவதாக சொன்னார். மேலும் பிக்பாஸ் அபிராமி உடன் கூட நிரூப் காதலில் விழுந்து பிரேக்அப் ஆகி இருக்கிறார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் உங்களுக்கும் நிரூப்பிற்கும் எப்போது திருமணம் என கேட்க, அதற்கு அவர் நாங்க இருவரும் இப்போது சிறந்த நண்பர்கள் தற்போது வரை திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை, யாரையும் அப்படி பார்க்கவில்லை என பதில் அளித்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்