மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது . இந்நிலையில் தற்போது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய கல்வித்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை ஆணையம் அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலின் 2 வது அலையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலின் 3 வது அலை தொடங்கியுள்ளது என்பது அறியப்படுகிறது. இதையடுத்து நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புது ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது . இதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி விடுமுறை அழைக்கப்பட்டு ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வித்துறை இணை செயலாளர் வெளியிட்டு உள்ளார்.
Post Office இல் ரூ.16 லட்சம் வரை வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் – முழு விபரம் இதோ!
அதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் பள்ளிகளை முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . . மேலும், கொரோனா அறிகுறி மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.