“செம்பருத்தி” சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான், செம்பருத்தி. இந்த சீரியலில் தற்போது நடித்து வந்த ஒரு முக்கிய நடிகை விலகி அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செம்பருத்தி சீரியல்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் செம்பருத்தி. பணக்கார குடும்பத்தில் வேலை பார்க்கும் செம்பருத்தியை, அந்த வீட்டின் எஜமானி மகன் ஆதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் இவர்களது திருமணத்தில் வந்தாலும், பின்னர் செம்பருத்தியை ஏற்று கொள்கின்றனர். இந்த சீரியலில் நடித்த ஷபானா மற்றும் கார்த்தி ஜோடிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது.
பாக்கியாவிடம் சிக்காமல் தப்பித்த கோபி, ஜெனி வேலைக்கு செல்வதை கூறும் செழியன் – இன்றைய எபிசோட்!
ஆனால், சமீபத்தில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்தி சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதற்கு சீரியல் குழுவினரிடம் நடந்த பாலிடிக்ஸ் தான் காரணம் என்று கூறப்பட்டது. கார்த்தி விலகியதும், அவருக்கு பதிலாக ஆதி கதாபாத்திரத்தில் பிரபல யூடியூபர் அக்னி நடித்து வருகிறார். ஆனால், அதன் பின்பு ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு இந்த ஆர்வம் குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இப்படியாக இருக்க, நடிகர் கார்த்தியை தொடர்ந்து இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராணி வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை உஷா எலிசபெத் நடிக்க இருக்கிறாராம். உஷா தேன்மொழி பிஏ, பாண்டவர் இல்லம் மற்றும் பிரியமானவளே போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.