பாக்கியாவிடம் சிக்காமல் தப்பித்த கோபி, ஜெனி வேலைக்கு செல்வதை கூறும் செழியன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் அலுவலகத்திற்கு சென்றதை பாக்கியா வீட்டில் இருப்பவர்களிடம் பெருமையாக சொல்கிறார். பின்னர் ஜெனி வேலைக்கு செல்ல இருப்பதை செழியன் குடும்பத்தினரிடம் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியின் அலுவலகத்திற்கு ராதிகா வந்துள்ளார். அதே நேரத்தில் அலுவலகத்தில் வேலை செய்பவர் பாக்கியாவிடம் சாப்பாடு ஆர்டர் செய்கின்றனர். அதனால் அவரும் வருகிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர் போன் செய்து கோபியிடம் சொல்கிறார். கோபி வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் பாக்கியாவிடம் வருகிறார்.
உங்களுக்கு தான் சாப்பாடு செஞ்சு கொடுத்தேனே, இது யாருக்கு என பாக்கியா கேட்க, முக்கியமான ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு தான் என கோபி சொல்கிறார். பின்னர் உன்னை யாரு வர சொன்ன சென்று கேட்க அலுவலகத்தில் வேலை செய்பவர் விவரத்தை சொல்கிறார். இந்த காலை வைத்துக் கொண்டு ஏன் இவ்வளவு தூரம் வர எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என கோபி சொல்கிறார்.
பின்னர் ராதிகா உள்ளே போன் பேச முடியவில்லை என வெளியே வருகிறார். அதை பார்த்த கோபி பதறி போய் என்ன செய்வதென்று தெரியாமல் ராதிகாவை உள்ளே அழைத்து செல்கிறார். பாக்கியாவிற்கு அலுவலகத்தில் வேலை செய்பவர் ஜூஸ் கொடுக்கிறார். இங்கிருந்து சீக்கரம் கிளம்பு என கோபி சொல்ல நீங்க அமர்ந்து வேலை செய்யும் இடத்தை பார்க்க வேண்டும் என பாக்கியா கேட்கிறார். முக்கியமான மீட்டிங் நடக்குது இல்லையென்றால் காட்டிருப்பேன் என கோபி சொல்கிறார்.
பின்னர் பாக்கியாவும், செல்வியும் அங்கிருந்து கிளம்ப வீட்டில் இருப்பவர்களிடம் பாக்கியா நான் எங்கே சென்றேன் என தெரியுமா என பெருமையாக சொல்கிறார். எங்கே என்று ஈஸ்வரி கேட்க, நான் அவருடைய ஆபிஸிற்கு போனேன் என் சாப்பாடு தான் வேண்டும் என ஆர்டர் செய்திருக்காங்க என சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறார். உன் சாப்பாடு தான் நன்றாக இருக்கும் என பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியுமே அப்பறம் என்ன என எழிலும் ஈஸ்வரியும் சொல்ல.
TN Job “FB Group” Join Now
அதெல்லாம் இல்ல அவர் தான் என் நம்பர் கொடுத்து என் பிசினஸ் நன்றாக இருக்க அவர் அப்படி பண்ணிருக்காரு என பாக்கியா சொல்கிறார். அவர் என்ன கடவுளா என எழில் சொல்ல, ஆமா அப்பா என்றால் கடவுள் தான் என சொல்கிறார். அவருக்கு நான் சென்றது எவ்வளவு சந்தோசம் தெரியுமா எனக்கு ஜூஸ் எல்லாம் கொடுத்தார். ரொம்ப நாள் நான் ஆபிஸ் போக வேண்டும் என நினைத்தேன் இப்போ தான் நடந்திருக்கு என சொல்கிறார் பாக்கியா.
கோபி வந்த பின்னர் சாப்பாடு நன்றாக இருந்ததா என கேட்டு அப்பறம் நீ சந்தோசப்பட்டு என ஈஸ்வரி சொல்கிறார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் போது, ஈஸ்வரி கோபியிடம் கேட்கிறார். கோபி நான் ஆர்டர் செய்யவில்லை அலுவலகத்தில் வேலை செய்பவர் தான் ஆர்டர் செய்தார் என சொல்லவும் பாக்கியாவிற்கு வருத்தமாக இருந்தது. பின்னர் செழியன் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என சொல்கிறார்.
“நான் தான் லட்சுமியின் அம்மா என்ற” உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
ஜெனி வேலைக்கு போக இருப்பதாக கோபியிடம் சொல்கிறார். என்ன தீடிரென என பாட்டி கேட்க, ரொம்ப நல்ல முடிவு என கோபி சொல்கிறார். உடனே வேலை கிடைக்குமா என பாட்டி கேட்க ஏற்கனவே செழியன் என்னிடம் சொல்லி விட்டேன் என சொல்கிறார். ஜெனிக்கு நல்ல வேலை வந்துள்ளது என செழியன் சொல்கிறார். என்ன கம்பெனி என கேட்க செழியன் சொல்கிறார். அது பெரிய கம்பெனி என அனைவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்க எனக்கு முன்னாடியே தெரியும் என சொல்கிறார். எவ்வளவு சம்பளம் என பாட்டி கேட்க வருசத்துக்கு 12 லட்சம், மாசம் 1 லட்சம் என சொல்கிறார். உனக்கு எவ்வளவு சம்பளம் என பாட்டி கேட்க எனக்கு அதை விட அதிகம் என சொல்கிறார். நான் வேலைக்கு போனால் எல்லாருக்கும் எல்லாமே வாங்கி தாரேன் என ஜெனி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.