விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகை பரீனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக கலக்கி வரும் நடிகை பரீனா, தனி தலைவி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா வெண்பா:
பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலின் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்வாரா லக்ஷ்மிக்கு அப்பா கிடைப்பாரா, ஹேமாவிற்கு அம்மா பாசம் கிடைக்குமா, வெண்பாவின் உண்மையான முகம் வெளியே தெரியவருமா போன்ற பல கேள்விகளுடன் தினசரி எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சென்ற வாரம் கண்ணம்மாவின் பிறந்தநாளில் லக்ஷ்மியின் அப்பா பற்றி சொல்வேன் என கண்ணம்மா சொல்ல அப்போ சீரியல் முடியப் போகிறது என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
ஆனால் அதுவும் நடக்காமல் போனது, இதற்கிடையே ஜெயிலில் இருந்து வெண்பா வெளியே வர மீண்டும் பாரதியுடன் சேர்ந்துவிட்டார். அதனால் சீரியலில் தன்னுடைய வில்லத்தனத்தை அவர் தொடங்கி இருக்கிறார். வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில், தன்னுடைய பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்னர் வரை அவர் சீரியலில் நடித்து வந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் வந்தது.
கர்நாடகாவில் ஹிஜாப் தடை செல்லும் – ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
இந்நிலையில் விஜய் டிவியில் தனி தலைவி என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். வெண்பா கதாபாத்திரத்தில் அவர் வில்லியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பம் மற்றும் தொழில் இரண்டிலும் சமமாக பங்களிப்பை கொடுப்பதால் அவர் பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி பெருமைப்படுத்தும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.