2023ம் ஆண்டு முதல் இவர்களுக்கும் ஜிஎஸ்டி – மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
2023ம் ஆண்டு முதல் இவர்களுக்கும் ஜிஎஸ்டி - மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
2023ம் ஆண்டு முதல் இவர்களுக்கும் ஜிஎஸ்டி - மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!2023ம் ஆண்டு முதல் இவர்களுக்கும் ஜிஎஸ்டி - மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
2023ம் ஆண்டு முதல் இவர்களுக்கும் ஜிஎஸ்டி – மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு சரக்கு மற்றும் சேவை வரி என்ற மறைமுக வரியானது வசூலிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரியில் முக்கிய மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய மறைமுக வரி வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதில் பல்வேறு வகையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அக்டோபர் 1, 2020ம் ஆண்டு முதல் ஒரு நிறுவனம் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் Turnover கொண்டதாக இருப்பின் GST INVOICE முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று GST INVOICE முறை மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி 100 கோடி ரூபாய் Turnover கொண்ட நிறுவனங்கள் இந்த முறையில் சேர்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி அன்று மீண்டும் இம்முறையில் மாற்றம் செய்யப்பட்டு 50 கோடி ரூபாய் Turnover வைத்திருக்கும் நிறுவனங்களும் இதில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் 20 கோடி ரூபாய் Turnover வைத்திருக்கும் நிறுவனங்களும் GST INVOICE வளையத்திற்குள் நுழைக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் இம்முறையில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக மத்திய மறைமுக வரி வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் போராட்டம் – அரசின் முடிவு என்ன?

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனி வருடத்திற்கு 5 கோடி ரூபாய் Turnover கொண்ட நிறுவனங்களும் ஜிஎஸ்டி பில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையானது 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டுக்குள் 1 கோடி ரூபாய் Turnover கொண்ட நிறுவனங்களும் இந்த வளையத்திற்குள் கொண்டு வர உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த முறையை அனைத்து நிறுவனங்களுக்கும் படிப்படியாக அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!