தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் போராட்டம் – அரசின் முடிவு என்ன?
தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய அலுவலகங்களிலும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் குறிப்பிட்ட சதவீத அளவில் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. இந்த அகவிலைப்படி உயர்வானது நாட்டின் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசு ஊழியர்கள் தற்போதுள்ள பணவீக்க விகிதத்திற்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை செலவுகளை நிர்வகித்துக் கொள்வதற்காக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இதேபோல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அகவிலைப்படி நிவாரணம் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசை பின்பற்றி மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வையும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தையும் அளித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இறுதியாக 2022 ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 3% உயர்த்தப்பட்டு, அரசு ஊழியர்கள் 34 சதவீத அகவிலைப்படி உயர்வு தொகையை பெற்று வருகிறார்கள்.
VIP-களுக்கு வந்தது விடிவு காலம்.. TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் 2022 ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வானது தீபாவளி பண்டிகையை ஒட்டி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் கடந்த தவணை அகவிலைப்படி நிவாரணம் ஆனது ஓய்வூதியர்களுக்கு இன்னும் அளிக்கப்படவில்லை. இதற்காக அரசுக்கு பலமுறை ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இன்னும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்க படாததை கண்டித்து மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தமிழகம் முழுவதிலும் ஈரோடு, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்