ஆவின் விற்பனை முகவர் ஆக விருப்பமா? அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!
தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் தனது விற்பனை முகவர்களை நியமித்து வருகிறது. தற்போது திருப்பூர் பகுதிகளில் ஆவின் முகவர் மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆவின் முகவர்:
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் பால் விற்பனை செய்து வருகிறது. இதற்காக முக்கிய நகரங்களில் பால் பதனிடும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்பட்டு, அவை பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது. பாலை தவிர பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால், நெய், பால்கோவா மற்றும் குலோப் ஜாமூன் போன்ற உப பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – வாங்குவதற்கான முழு விபரம் இதோ!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், திருப்பூர் உள்ள 13 ஒன்றியத்திலும் விற்பனை முகவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருப்பூர் ஒன்றியத்தின் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தோடு தான் இந்த செயல்பாடு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று பயனடைய அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான கூடுதல் விவரங்களை அதிகாரபூர்வ தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.