இந்திய ஆதார் துறையில் ரூ.9,00,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!
இந்திய ஆதார் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த மத்திய அரசு பணியில் மூத்த ஆய்வாளர் எனப்படும் SENIOR ANALYST பணியிடம் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய அரசு துறையான ஆதார் துறையில் மூத்த ஆய்வாளர் எனப்படும் SENIOR ANALYST பணிக்கு ஒரு காலியிடம் இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் அல்லது புள்ளியியல் B.Tech/MBA/MCA/M.Sc ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- ஆதார் துறையில் பணிபுரிய FINTECH துறை சார்ந்த திட்ட நிர்வாகத்தில் 4+ வருட அனுபவம் வேண்டும். மேலும் நிதியளிக்கப்பட்ட திட்டங்களில் அரசாங்கத்தில் பணிபுரிந்த அனுபவம் இருப்பது அவசியம் ஆகும். அது மட்டுமில்லாமல் MS Office, தரவு பகுப்பாய்வு மற்றும் பிற நிரல் மேலாண்மைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
- மேலும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 9 லட்சம் வரை வருமானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆதார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13 செப்டம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்