ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இனி எளிமையாக முடிக்கலாம்!
இந்தியர்கள் அனைவருக்கும் அடையாள ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு. இது மிகவும் முக்கியமானது அவசியமான ஆவணமாகும். தற்போது ஆதாரில் அப்டேட் செய்ய சில வசதிகளை ஆதார் அமைப்பு (UIDAI) ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
ஆதார் கார்டு
இந்திய நாட்டில் ஆதார் கார்டு என்பது அடையாள ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆதார் கார்டை வைத்து இறப்புச் சான்றிதழ் பெற முடிகிறது. அத்துடன் பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் கார்டை பெறும் வசதிகளும் உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதில் உள்ள விவரங்களை மிகவும் சுலபமாக அப்டேட் செய்து கொள்ளலாம். அதாவது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக அப்டேட்களை செய்து முடித்து விடலாம்.
இந்திய இரும்பு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்…!
ஆனால் இதில் வழங்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை மாற்றுவதற்கு மட்டுமே ஆதார் சேவை மையத்துக்கு நேரில் செல்ல வேண்டும். ஏனெனில் ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் தான் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த மொபைல் நம்பரை வைத்து தான் மற்ற விவரங்களையும் அப்டேட் செய்ய முடியும். இது இல்லாவிட்டால் அப்டேட்களை மேற்கொள்ள முடியாது. இதனால் ஏராளமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நிறைய பேரிடம் இருக்காது. அதனால் ஆதார் அமைப்பு இதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் 17 காலிப்பணியிடங்கள் – ரூ.62000 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது எந்தவொரு மொபைல் நம்பரை வைத்தும் இனி ஆதாரில் அப்டேட் செய்யலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் ஆதார் அப்டேட் செய்யும்போது மொபைல் நம்பருக்கு வரும் OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை பதிவிட்டால்தான் அப்டேட் செய்ய முடியும். எனவே இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ஒரே மொபைல் நம்பரை பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய முடியும். இந்த வசதியானது ஆதார் ஆதெண்டிகேசன் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.