இந்தியாவின் முக்கிய அடையாள ஆவணமான ஆதார் கார்டு ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்து டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களையும் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
ஆதார் கார்டு:
மத்திய ஆதார் அமைச்சகத்தால் வழங்கக்கூடிய ஆதார் கார்டு இந்திய குடிமக்களுக்கான அடையாள சான்றாக விளங்குகிறது. இதன் வாயிலாக அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை நாம் பெற முடியும். இத்தகைய ஆதார் கார்டை பெறும் நடைமுறைகள் தற்போது எளிதாகி விட்டது. வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாகவே இந்த ஆதார் கார்டை பெறலாம். அதற்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம். ஆதார் கார்டை பெற விரும்புபவர்கள் கட்டாயம் பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து முகவரி சான்று, பிறப்புச் சான்றிதழ், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் வழங்க வேண்டும்.
ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை:
- UIDAI இணையதளம் வாயிலாக ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்.
- முகப்பு பக்கத்தில் ஆதார் என்பதை தேர்வு செய்து இது கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
- அடுத்ததாக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று உங்களது கைரேகை, கண் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.
- இதன் நடைமுறைகளுக்கு பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.
- இறுதியாக உங்க விவரங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பிறகு ஆதார் அட்டை வழங்கப்படும். இதனை நீங்கள் ஆன்லைன் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.