ஆதாரில் விவரங்களை புதுப்பிக்க அருமையான சான்ஸ் – ஜூன்.14 வரை இலவச சேவை!
நீங்கள் ஆதாரின் விவரங்களை 10 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால் உங்களுக்கான ஒரு அருமையான வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
ஆதார் அப்டேட்:
தற்போது அனைத்து சேவைகளை பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு வாயிலாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் மற்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஒத்து இருக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதனை கட்டாயமான முறையில் மாற்ற வேண்டும்.
நீங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்காமல் வைத்திருக்கிறீர்கள் எனில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தற்போது மத்திய அரசு ஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைன் முறையில் மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத 50000 மாணவர்கள் – அமைச்சர் ஆலோசனை!
அத்துடன் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம் போல் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். மேலும் இலவச சேவையை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.