சீனாவில் புதிய வகை “லங்யா” வைரஸ் பரவல் – 35 பேர் பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!
கொரோனா வைரஸின் தாயகமான சீனாவில் தற்போது புதிதாக லங்யா என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் தாக்குதலின் முழு விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய வைரஸ்:
நமது அண்டை நாடான சீனாவில் இருந்து தான் பல வைரஸ் உருவாகி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கூட சீனாவில் உருவாகியது தான். இந்நிலையில் சீனாவில் தற்போது ‘லங்யா’ என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் சீனாவின் ஷான்டாங், ஹெனன் மாகாணங்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, தசை பிடிப்பு, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த வைரஸானது நிபா, ஹெண்ட்ரா வைரஸ் வகைகளை சார்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை லங்யா வைரஸ் நாய் அல்லது ஆடு போன்ற வீட்டு அல்லது எலி வகையை சார்ந்த காட்டு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
TNPSC குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு? வலுக்கும் கோரிக்கை
Exams Daily Mobile App Download
இந்த வைரஸால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் இந்த வைரஸை தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பாதித்துள்ளவர்களுக்கு மாற்று மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் தொற்று பரவலும் பரவி வருவதால் மக்கள் பதட்டமான நிலையில் இருக்கின்றனர்.