கொரோனாவை போன்று சீனாவில் பரவ ஆரம்பித்த புதிய நோய் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!
சீன மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்தே மீண்டு இன்னும் வரவில்லை அதற்குள் அடுத்த தாக்குதலாக குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது. அந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. முதன் முதலில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவி பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றானது அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவ தொடங்கியது.
தற்போது வரை சீன மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக சீனாவில் குரங்கு அம்மை பரவ தொடங்கியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் இருந்து குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கியது. இதுவரை சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் சீனாவும் சேர்ந்துள்ளது. அந்நாட்டின் சோங்கிங் நகரம் வந்த விமான பயணிக்கு முதல் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நபரின் உடம்பில் தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் இருந்த நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பபட்டதில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நபர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்