புதிய ஆபத்து.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக மாற வாய்ப்பு.. மக்கள் அச்சம்!
தமிழகத்தில் கடந்த அக்.31ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அன்று முதல் கிட்டதட்ட ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது தலைநகர் சென்னையை பொறுத்தவரை இரவு பகலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வேதாரண்யம், காயல்பட்டினத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே போல திருச்சி, மதுரை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நவ.9ம் தேதி இலங்கையை ஒட்டியிருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வரம்பு நிர்ணயம் – GPF விதிகளில் பெரிய மாற்றம்!
Follow our Instagram for more Latest Updates
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும். அதனால் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.