பணியாளர்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலம் பகிரக் கூடாது – கல்லூரிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரிவோர் அவர்கள் பணிபுரியும் கல்லூரி வளாகம் மற்றும் அலுவகத்தின் மீது ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை எந்த ஒரு வாட்ஸ்ஆப் குழுவிலும் பதிவேற்றம் செய்யக்கூடாது. மேலும் அது குறித்து சம்மந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து கல்லூரி இணை இயக்குனர்களுக்கும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் – தேர்வர்கள் குழப்பம்!!
இதுகுறித்து கல்லூரிக்கல்வி இயக்குனரகத்தின் இணை இயக்குனர் நா.ராமலட்சமி அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து அரசு கல்லூரி மற்றும் கல்லூரி மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தங்கள் பணிபுரியும் கல்லூரி வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் ஏதாவது புகார் இருந்தால் அதனை எந்த வாட்ஸ்ஆப் குருப்பிலும் அனுப்ப கூடாது. அது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
ஜே.இ.இ தேர்வு மோசடி வலைதளங்கள் – தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!!
இந்த உத்தரவை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அனைத்து கல்லூரி முதல்வர்களும் பணிபுரியும் பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்