ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் – தேர்வர்கள் குழப்பம்!!

0
ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் - தேர்வர்கள் குழப்பம்!!
ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் - தேர்வர்கள் குழப்பம்!!
ரயில்வே துறை தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் மையம் – தேர்வர்கள் குழப்பம்!!

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் விண்ணப்பித்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தேர்வு நடக்கவுள்ளது. விண்ணப்பித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பெங்களூர் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்ற விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

RRB தேர்வுகள்:

இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்காக சுமார் 35 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் (RRB) கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 2 வருடங்கள் கழித்து இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் உள்ளன.

கொரோனா கட்டுப்பாடு செலவை பெற்றோர்களே ஏற்க வேண்டும்- தனியார் பள்ளிகள் அறிவிப்பு!!

ஆனால் ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்பித்த பலருக்கு கர்நாடக மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதே போல் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கரூர், திண்டுக்கல், கோவை என தொலைதூர மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஜனவரி மாதம் 23, 25 மற்றும் 30-ஆம் தேதிகளில் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு பெங்களூரில் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் எந்த தேர்வு மையம் என்பதை தேர்வுக்கு 4 நாட்கள் முன்னதாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளதால் தேர்வுக்கு 4 நாட்கள் முன் அறிவித்தால் எப்படி செல்ல முடியும் என்று விண்ணப்பதாரர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனால் பலர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் அவர்களது மாவட்டம் அல்லது அண்டை மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!