நாடு முழுவதும் பள்ளி, கல்லுரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு !!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் சார்ந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ன. இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லுரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது ???
மாநிலங்களில் நிலவும் சூழலைப் பயன்படுத்தி, அந்தந்த மாநிலங்களே பள்ளிகள் திறக்கும் தேதி, தேர்வு அட்டவணையை முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு ஏற்கனேவே அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பள்ளி, கல்லுரிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்துவது தான் முதல் பணி என்றும், தனிமனித இடைவெளியியுடன் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அவர்கள் அறிவித்துள்ளார்.