15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவிப்பு !!
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தேர்வுகள் நடத்துவது தொடர்பான தேதியை மே 3 வது வாரம் சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
Download CBSE Exam Time Table 2020
தற்போது அதற்கான பணிகள் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி, இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் மற்றும் சானிடைசர்களை கையேடு கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |