இவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பா? – மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!
தமிழகத்தில் மருதாணி, மெஹந்தி போட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி கிடையாது என சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் செய்திக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் அலுவலர் விளக்கம்:
பெண்கள் மற்றும் ஆண்கள் விழா காலங்களில் கைகளில் மெகந்தி அல்லது மருதாணி போடுவது வழக்கம். இந்த நிலையில் மருதாணி மற்றும் மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் சென்னை. திருவள்ளூர் மாவட்டங்களில் பல வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ரசாயனங்களை கொண்டு அவற்றை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கம் வாங்க சரியான நேரம் சவரனுக்கு ரூ.280 குறைவு – இன்றைய தங்கம் விலை!
இதுகுறித்து தற்போது தேர்தல் சென்னை தேர்தல் அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி இந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி எனவும், வாக்குச்சாவடிகளில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.