தற்போது திகார் சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து டெல்லியில் ஆட்சி செய்வதற்கான அனுமதி வழங்க கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
கோரிக்கை மனு:
கடந்த மார்ச் மாதம் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வரை நீதிமன்றத்தின் காவலில் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் திகார் சிறையில் இருந்து டெல்லியை ஆட்சி செய்ய அனுமதி அளிக்க கோரி மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். மேலும் சிறையில் இருந்து ஆட்சி செய்ய பிரதமருக்கும், முதல்வருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித தடையும் இல்லை என்பதை தனது மனுவில் சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்துள்ளார்.