Google Chrome பயனர்களுக்கு அரசாங்கம் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெளியான அறிவிப்பு
இந்தியாவில் Google Chrome இல் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து CERT-in ஆனது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை உடனே நிறுவ வேண்டும் என அது பயனர்களை வலியுறுத்தி உள்ளது. கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்ட அறிவிப்பின் படி இணைய உலாவியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்புகளில் காணப்படும் பல உயர்-தீவிர பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மேற்கோள்காட்டி இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் BE தேர்ச்சி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அது மட்டுமில்லாமல் , இந்த பாதிப்புகள், ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டால் உடனே தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்தி, சேவை மறுப்பு (DoS) நிலையை ஏற்படுத்தும். இதனால் கணினியில் உள்ள தகவல்கள் மற்றும் முக்கிய தரவுகளை ஹேக்கர்கள் ஹேக் செய்யாமல் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.