தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கவனிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடாளுமன்றத்தில் மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பள்ளிகள் வாக்கு சாவடி மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு சாவடிகளை வாக்களிக்க ஏதுவாக மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் BE தேர்ச்சி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் ஆனது பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்கும் வகையில் ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.