ராம நவமியை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 17) பொது விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அரசானது அறிவித்துள்ளது. இந்த விடுமுறையானது எந்தெந்த இடங்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.
நாளை பொது விடுமுறை:
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 17) ராமர் பிறந்த தினத்தை போற்றும் விதமாக ராம நவமியானது கொண்டாடப்படவுள்ளது. எனவே இந்த நாளை பொது விடுமுறை நாளாக அரசானது அறிவித்துள்ளது. இந்த பொது விடுமுறையானது அகமதாபாத், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்.. மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அப்டேட்!
இப்பொது விடுமுறையானது அரசு அலுவலங்கள், கல்வி வாரியங்களுக்கு பொருந்தும். அரசு பொது விடுமுறையையை அறிவித்தது தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியானது மேலே கூறப்பட்டுள்ள இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கும் விடுமுறையை வழங்கியுள்ளது. மேலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும் ஏடிஎம், மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் ஆகிய சேவை தொடர்ந்து செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.