நடப்பு வாரத்தின் இறுதி நாளில் தமிழக பத்திரப்பதிவுத்துறை செயல்படுவது குறித்தான குழப்பங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பதிவுத்துறை:
நடப்பு நிதியாண்டானது வரும் 31 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. நிதியாண்டு முடிவதற்குள் பல்வேறு தரப்பிலான நிதி சார்ந்த செயல்பாடுகளும் முடிப்பதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வருமான வரி மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு விஷயங்கள காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பு நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடைய உள்ளது. வழக்கமாக நிதியாண்டு மார்ச் 31 சனிக்கிழமைகளில் வந்தால் அன்றைய தினம் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம்.
சிலிண்டர் முதல் கார், பைக் விலை வரை.. ஏப்ரல் 1 முதல் மாற்றம் – அலர்ட் மக்களே!
ஆனால் நடப்பு ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மேலும் பதிவுத்துறை அலுவலர் இல்லாத காரணத்தினால் பதிவுத்துறை தலைவர் இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும். மேலும் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் மொத்தம் உள்ள 575 பத்திரப்பதிவு அலுவலகங்களும் வரும் சனிக்கிழமை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. அனுமதி தொடர்பான விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.